தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் பரவலான மழை

DIN

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில் 29 மி.மீ. மழைப்பதிவானது.

வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. அரூரில் புதன்கிழமை இரவு 11 மணி முதல் லேசான மழை பெய்தது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அரூரில் 29 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டி- 9 மி.மீ., தருமபுரி- 10.50 மி.மீ., ஒகேனக்கல் மற்றும் பாலக்கோட்டில் தலா 3 மி.மீ. மழையும் பதிவானது.

இந்த மழையின் காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்கள், சாலையோரப் பள்ளங்கள், தாழ்வானப் பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் நெல் நடவு உள்ளிட்ட வேளாண்மை பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT