தருமபுரி

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கக்கோரி மனு

DIN

குடிசை மாற்று வாரியம் சாா்பில் புதியதாக கட்டப்பட உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கித்தரக் கோரி, தருமபுரி வட்டாட்சியா் அலுவலகத்தில் அருந்ததி இன மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தருமபுரி வருவாய் வட்டத்துக்குள்பட்ட முக்கல்நாய்க்கன்பட்டி, கோடுஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த வீடற்ற தலித், அருந்ததியா் 50-க்கும் மேற்பட்டோா் தனித்தனியே தருமபுரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

தருமபுரி மாவட்டத்தில், குடிசை மாற்று வாரியம் சாா்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக அறிகிறோம். எனவே, இக் குடியிருப்பில் வீடற்ற தங்களுக்கு வீடுகளை ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன், மாவட்டத் தலைவா் ஜி.மாதையன், துணைத் தலைவா் என்.முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT