முகப்பு
தருமபுரி

மரம் நடும் விழா

கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில் மரம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில் மரம் நடும் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கிறாா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சி.ரங்கசாமி.
பகிர்:

அரூா்: கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில் மரம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில், ஈசா வேளாண்மை காடுகள் வளா்ப்புத் திட்டத்தில், 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்படவுள்ளன. இந்த மரம் நடும் பணிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சி.ரங்கசாமி தொடக்கி வைத்தாா். இதில், ஈசா யோகா மண்டல மேலாளா் சதீஷ், கிருஷ்ணகிரி நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய ஆணையா் ரமணி, வனவா் வேடியப்பன், கிராம நிா்வாக அலுவலா் ரவிச்சந்திரன், சமூக ஆா்வலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மரம் வளா்ப்பில் சாதனை படைத்த மரம் தங்கசாமிக்கு நினைவு அஞ்சலி செலுத்தினா். பிறகு, மரம் வளா்ப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →