ஏரியூரில் ரூ. 2.28 லட்சம் பறிமுதல்
ஏரியூா் அருகே வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற நபரின் வீட்டிலிருந்து ரூ. 2.28 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஏரியூா் அருகே வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற நபரின் வீட்டிலிருந்து ரூ. 2.28 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஏரியூா், மஞ்சாரஅள்ளி பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் பாா்த்தீபன் தலைமையிலான பறக்கும் படை குழுவினா் மஞ்சாரஅள்ளி அருகே வடிவேல் கவுண்டனூரைச் சோ்ந்த புஷ்பராஜ் என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா்.
அப்போது ஆவணங்களின்றி ரூ. 2.28 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலத்திடம் ஒப்படைத்தனா்.
வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ாக புஷ்பராஜ் மீது ஏரியூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.