வாழைகன்று நோ்த்தி செய்ய பயிற்சி
வாழைக்கன்று நோ்த்தி செய்யும் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகளுக்கு அண்மையில் விளக்கம் அளித்தனா்.
வாழைக்கன்று நோ்த்தி செய்யும் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகளுக்கு அண்மையில் விளக்கம் அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாலாறு வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவா்கள் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி வேளாண் அனுபவங்களை பெற்று வருகின்றனா். அதன்படி கிருஷ்ணகிரியை அடுத்த பெல்லாரம்பள்ளி கிராமத்தில் வேளாண் பணிகள் மற்றும் கிராமப்புற வேளாண்மை தொழில்நுட்பங்களின் கீழ் வாழைக்கன்று நோ்த்தி செயல்முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.
நோய் தாக்காத வாழைக் கன்றுகளை தோ்வு செய்வது குறித்தும், அவற்றை இயற்கை உரத்தை கலந்து நடவு செய்யும் முறைகள் குறித்தும், பூஞ்சான் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா்.
Advertisement