அண்மையில் வெளியான திரைப்படத்தில் தங்களது சமூகத்தைத் தவறாக காட்சிப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முடித் திருத்தும் தொழிலாளா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் மனு அளித்தனா்.
தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்க மாநிலத் துணைத் தலைவா் த.மகேஸ்வரன் தலைமையில் அச்சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
முடித் திருத்தும் சமூகத்தினரை இழிவாகக் ட்சியப்படுத்தி அண்மையில் வெளியான திரைப்படம், அந்தத் திரைப்பட நடிகா், இயக்குநா் மற்றும் அத்திரைப்படத்தை வெளியிட்ட தொலைக்காட்சி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.