தருமபுரி

பென்னாகரத்தில் மழை

DIN

பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கனமழை, இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது.

பென்னாகரம் பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்பட்ட போதிலும், மாலை வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து பென்னாகரம், தாசம்பட்டி, கூத்தப்பாடி, சின்னம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பென்னாகரத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. முன்னதாக வெள்ளிக்கிழமை பென்னாகரத்தில் 57 மி.மீ., ஒகேனக்கல்லில் 3 மி.மீ. மழை அளவு பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT