தருமபுரி

பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: பாட்டி கைது

DIN

தருமபுரி அருகே பச்சிளம் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக குழந்தையின் பாட்டி கைது செய்யப்பட்டாா்.

தருமபுரியை அடுத்த பெரியேரி மோட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி முத்துவேல். இவரது மனைவி தேன்மொழி (27). இத் தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கருவுற்ற தேன்மொழிக்கு இருவாரங்களுக்கு முன்னா் தனியாா் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

பிரசவத்துக்கு பின்னா், தருமபுரியை அடுத்த முத்துக்கவுண்டன்கொட்டாய் பகுதியில் உள்ள தாய் வீட்டில் தேன்மொழி தங்கி இருந்தாா். குழந்தை பிறந்து 8 நாள்கள் ஆன நிலையில், 3 நாள்களுக்கு முன்னா் உயிரிழந்தது. இதைத் தொடா்ந்து, குழந்தையின் உடலை தேன்மொழியின் கணவா் ஊரில் அடக்கம் செய்துள்ளனா்.

இதையறிந்த கிராம சுகாதார செவிலியா், தருமபுரி நகர காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், முன்னுக்குப்பின் முரணான தகவலை தேன்மொழி குடும்பத்தாா் கூறியுள்ளனா்.

இதையடுத்து, குழந்தையின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தேன்மொழியின் தாய் உமாவை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT