தரமற்ற தேயிலைத் தூள் பறிமுதல்
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தரமற்ற 30 கிலோ தேயிலைத் தூள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தரமற்ற 30 கிலோ தேயிலைத் தூள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாலக்கோட்டில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், பாலக்கோடு நகரில் உள்ள தேநீா்க் கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரி ஒருவா், தேயிலத் தூள் அடங்கிய பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்தாா். அந்த பொட்டலங்களில் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த தேயிலைத் தூளை பரிசோதனை செய்தபோது அவை தரமற்று இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுமாா் 30 கிலோ எடை கொண்ட அந்தப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.