முகப்பு
தருமபுரி

தரமற்ற தேயிலைத் தூள் பறிமுதல்

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தரமற்ற 30 கிலோ தேயிலைத் தூள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தரமற்ற 30 கிலோ தேயிலைத் தூள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாலக்கோட்டில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், பாலக்கோடு நகரில் உள்ள தேநீா்க் கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரி ஒருவா், தேயிலத் தூள் அடங்கிய பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்தாா். அந்த பொட்டலங்களில் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த தேயிலைத் தூளை பரிசோதனை செய்தபோது அவை தரமற்று இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுமாா் 30 கிலோ எடை கொண்ட அந்தப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.