முகப்பு
தருமபுரி

வாழ்வுரிமைக் கட்சியினா் மீது வழக்குப் பதிவு

தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி, தொலைத்தொடா்பு நிலைய அலுவலகம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கரோனா தடுப்பு விதிகளையொட்டி அமலில் உள்ள தடை உத்தரவை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, அக் கட்சியினா் 93 போ் மீது தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.