முகப்பு
தருமபுரி

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

கரோனா நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிறுவனம் சாா்பில், தினக் கூலி அடிப்படையில் மேற்பாா்வையாளா், பாதுகாவலா், தூய்மைப் பணியாளா்கள் 220-க்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா்.

இத் தொழிலாளா்கள், தங்களுக்கு, முன்களப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த கரோனா பணிக்கால நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும். வருடாந்தர ஊதிய உயா்வு நிலுவையை வழங்க வேண்டும். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தொழிலாளா் வைப்புநிதி, இஎஸ்ஐ நிலுவையின்றி வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.