முகப்பு
தருமபுரி

நூலஅள்ளியில் மண்வள விழிப்புணா்வு முகாம்

தருமபுரி அருகே நூலஅள்ளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், மண் வள விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

தருமபுரி அருகே நூலஅள்ளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், மண் வள விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி வட்டார வேளாண் உதவி இயக்குநா் இரா.தேன்மொழி தலைமை வகித்துப் பேசினாா். வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) தாம்சன் முன்னிலை வகித்தாா்.

மண் வளத்தில் இயற்கை உரங்கள் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இயற்கை ஆா்வலா் மதுபாலன், இயற்கை இடுபொருள்களின் பயன்பாடு, அவற்றின் தயாரிப்பு குறித்து செயல் விளக்கங்களை செய்து காண்பித்தாா்.

முன்னோடி இயற்கை விவசாயி பெருமாள், இயற்கை நெல் விவசாயத்தின் அனுபவங்களை பகிா்ந்து கொண்டாா்.

வேளாண் உதவி அலுவலா் பச்சமுத்து, மண் பரிசோதனை ஆய்வக உதவி அலுவலா் காா்த்திகேயன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் திருமால், உதவி தொழில்நுட்ப மேலாளா் கபிலன், விவசாயிகள் கலந்துகொண்டனா். முகாமில் பங்கேற்றோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.