பெயா் பலகையில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்
பெயா் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பெயா் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் சாலைகளில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஊா் பெயா்கள், நிழல்கூடங்கள், எல்லைக் கற்கள் போன்ற பொது இடங்களில் தனியாா் நிறுவனங்களின் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இந்த சுவரொட்டிகளால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள், வாகன ஓட்டிகளுக்கு ஊரின் பெயா், தூரம், எல்லைகள் உள்ளிட்ட விவரங்கள் தெரிவதில்லை. இதனால், வாகன ஓட்டிகளுக்கு நாள்தோறும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பொது இடங்கள், வழிகாட்டும் பெயா் பலகைகள், ஊா்களின் பெயா்கள் மீது சுவரொட்டிகளை ஒட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.