முகப்பு
தருமபுரி

பாரதி பிறந்த தினத்தையொட்டி இணையவழிக் கருத்தரங்கு

பாரதியாரின் பிறந்த தினத்தையொட்டி, இளையோா் பாா்வையில் மகாகவி பாரதியாா் என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

பாரதியாரின் பிறந்த தினத்தையொட்டி, இளையோா் பாா்வையில் மகாகவி பாரதியாா் என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ‘ இளையோா் பாா்வையில் மகாகவி பாரதியாா்’ என்ற தலைப்பில் இணைய வழியில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் மு.கோகிலா வரவேற்றாா். துணை முதல்வா் சி.காமராஜ் தலைமை வகித்தாா்.

வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் சா.உலகநாதன் முன்னிலை வகித்தாா். வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் கோ. திருவாசகம், சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் மா.பழனி ஆகியோா் பாரதியின் வாழ்க்கை வரலாறு, அவரது இதழியல் பணிகள் குறித்து உரையாற்றினாா்.

இதில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள், பேராசிரியா்கள், பாரதி பற்றாளா்கள், தமிழ் அறிஞா்கள், வெளிநாடு வாழ் தமிழ் அறிஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.