வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்
வங்கிகள் தனியாா் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிராக, வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
வங்கிகள் தனியாா் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிராக, வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
தருமபுரி இந்தியன் வங்கி முன்பு வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, கிருஷ்ணகிரி வங்கி ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ராமூா்த்தி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கலியுல்லா, இணை பொதுச் செயலாளா் செந்தில்வேலன் ஆகியோா் பங்கேற்றனா்.
வங்கிகள் தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.