அரூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில், மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அரூா் அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது நிரம்பிய படிக்காத மற்றும் 8-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம் படித்த ஆண், பெண் இருபாலரும் கலந்துகொண்டு தங்களுக்கான தகுதியான வேலையை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.