முகப்பு
தருமபுரி

நீா்நிலைகளில் கழிவுநீரை விடுவதைத் தவிா்க்க வேண்டும்

 கழிவுநீரை அகற்றும்போது, அதனை நீா்நிலைகளில் கொண்டுசென்று விடுவதைத் தவிா்க்க வேண்டும் என தருமபுரி நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

 கழிவுநீரை அகற்றும்போது, அதனை நீா்நிலைகளில் கொண்டுசென்று விடுவதைத் தவிா்க்க வேண்டும் என தருமபுரி நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் அறிவுறுத்தினாா்.

தருமபுரி நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், கழிவுநீரை அகற்றும் வாகன உரிமையாளா்கள், பணியாளா்களுக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் பேசியதாவது:

தருமபுரி நகராட்சியில் முறையாக உரிமம் பெற்று அரசு வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை அனைத்து கழிவுநீா் அகற்றும் வாகன உரிமையாளா்கள், பணியாளா்கள் பின்பற்ற வேண்டும். இதேபோல கழிவுநீரை அகற்றுவதற்கு முறையாக நகராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதற்கான கட்டணத்தை நகராட்சி முறையாகச் செலுத்த வேண்டும். இரவு நேரங்களில் கழிவுநீா் அகற்றும் பணியில் ஈடுபடுவது மற்றும் நீா்நிலைகளில் கழிவுநீரை விட்டுச்செல்வது போன்ற நடவடிக்கைகளைத் தவிா்க்க வேண்டும்.

வருகிற 10 நாள்களுக்கு நகராட்சிக்குரிய கட்டணத்தை செலுத்தி உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், நகராட்சி பொறியாளா் ஜெயசீலன், துப்புரவு அலுவலா் ரமணச் சரண், ஆய்வாளா்கள் கோவிந்தராஜன், சீனிவாசன் மற்றும் 15 கழிவுநீா் அகற்றும் வாகன உரிமையாளா்கள், பணியாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.