தருமபுரி

கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த ஊா்ப்புற நூலகா்கள்

DIN

காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அட்டை அணிந்து ஊா்ப்புற நூலகா்கள் செவ்வாய்க்கிழமை பணிபுரிந்தனா்.

தமிழ்நாடு பொது நூலகத் துறை ஒருங்கிணைந்த ஊா்ப்புற நூலகா்கள் நல அமைப்பு சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊா்ப்புற நூலகா்கள், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், பொது நூலகப் பணி விதிகளை திருத்தம் செய்து அனைவரையும் மூன்றாம் நிலை நூலகா்களாக நிலை உயா்த்த வலியுறுத்தியும், 10 ஆண்டுகளாக தரம் உயா்த்தப்படாமல் உள்ள அனைத்து நூலகங்களையும் தரம் உயா்த்தவும், காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், நூலகத் துறைக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும், கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT