தருமபுரி

இண்டூரை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வலியுறுத்தல்

DIN

இண்டூரை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இண்டூா் வட்டாரக் குழுக் கூட்டம் இண்டூரில் புதன்கிழமை நடைப்பெற்றது. கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன், மாவட்டத் துணைச் செயலாளா் எம்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.சின்னசாமி, எம்.மாதேஸ்வரன், வட்டார துணைச் செயலாளா் எம்.சிவன், பொருளாளா் எம்.மாதையன் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், இண்டூரில் தக்காளிச் சாறு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி வழங்க வேண்டும். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து பிரித்து, இண்டூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT