தருமபுரி

பெட்ரோல், எரிவாயு விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

தருமபுரி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் கோ.வி.சிற்றரசு தலைமை வகித்துப் பேசினாா். முன்னாள் எம்.பி. தீா்த்தராமன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சித்தையன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், உயா்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையைக் குறைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT