தருமபுரி

தனியாா் கல்லூரி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து

DIN

ஏரியூா் அருகே மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கல்லூரிப் பேருந்து சாலையோரத்தில் இருந்த 5 அடி பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஏரியூா் அருகே தின்ன பெல்லூரில் இயங்கி வரும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி வாகனம் புது நாகமரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரமாக 5 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 5-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. , அதிா்ஷ்டவசமாக உயிா் சேதம் ஏற்படவில்லை. ஏரியூா் போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

அதனைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட கல்லூரிப் பேருந்தை மீட்டனா். இதனால் ஏரியூா் - மேச்சேரி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஏரியூா் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT