தருமபுரி

அணையில் மூழ்கி இளைஞா் பலி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அணையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அணையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

காரிமங்கலம் அருகே கெண்டிகான அள்ளியை அடுத்த சேவன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் நைனா என்பவரின் மகன் சிலம்பரசன் (30). இவா், வெள்ளிக்கிழமை தும்பல அள்ளி அணைக்கு குளிக்கச் சென்றபோது ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளாா். இதைக்கண்ட அருகில் இருந்தவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து, பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், 1 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு சிலம்பரசன் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது உடல், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT