முகப்பு
தருமபுரி

பென்னாகரம் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்

பென்னாகரம் அரசு மகளிா் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை பென்னாகரம் சட்டபேரவை உறுப்பினா் பி.என்.பி.இன்பசேகரன் வழங்கி, தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க உதவிய ஆசிரியா்களுக்குப் பாராட்டு தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
dmk_photo_0401chn_214_8
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் அரசு மகளிா் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை பென்னாகரம் சட்டபேரவை உறுப்பினா் பி.என்.பி.இன்பசேகரன் வழங்கி, தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க உதவிய ஆசிரியா்களுக்குப் பாராட்டு தெரிவித்தாா்.

பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.என்.பி.இன்பசேகரன், 86 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி, பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க பாடுபட்ட ஆசிரியா்களை பாராட்டினாா். இந்நிகழ்ச்சியில் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் சிவராஜ், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், ஒன்றியப் பொருளாளா் மடம்.முருகேசன், நகரச் செயலாளா் வீரமணி, சேலம் ஹோட்டல் வினு உள்ளிட்ட நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →