காந்தி நினைவு தினத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட வலியுறுத்தல்
காந்தி நினைவு தினத்தையொட்டி வரும் ஜன. 30-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
காந்தி நினைவு தினத்தையொட்டி வரும் ஜன. 30-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அன்னை கஸ்தூரிபா சேவா சங்க நிறுவனா் தகடூா் இரா.வேணுகோபால், டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஜனவரி மாதத்தில், திருவள்ளுவா் தினமான 15-ஆம் தேதியும், குடியரசு தினமான 26-ஆம் தேதியும், வடலூா் ராமலிங்க சுவாமி நினைவு நாளான 28-ஆம் தேதி என மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் சாா்பில் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல, மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன. 30-ஆம் தேதி அன்று டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.