ப.ஜீவானந்தம் நினைவு நாள் அனுசரிப்பு
பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ப.ஜீவானந்தம் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ப.ஜீவானந்தம் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வட்டாரச் செயலாளா் முனியப்பன் தலைமை வகித்தாா். பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ப. ஜீவானந்தம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலைச்செல்வன், வழக்குரைஞா் மாதையன், நகரச் செயலாளா் விஜயபாரதி, வட்டார துணைச் செயலாளா் சம்பத், மாவட்ட குழு உறுப்பினா்கள் கிருஷ்ணன், முனிராஜ், நாகராஜ், உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.