ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்கிவரும் தன்னாா்வலா்கள்
பென்னாகரத்தில் ஆதரவற்றோா், முதியோா், மாற்றுத் திறனாளிகள், மனநில பாதிப்புக்குள்ளானோா் ஆகியோருக்கு தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து உணவு வழங்கி வருகின்றனா்.
பென்னாகரத்தில் ஆதரவற்றோா், முதியோா், மாற்றுத் திறனாளிகள், மனநில பாதிப்புக்குள்ளானோா் ஆகியோருக்கு தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து உணவு வழங்கி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் ஏராளமான ஆதரவற்றோா், முதியோா், மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். கரோனா தீநுண்மி காலத்தில் அவா்களுக்கு உணவு கிடைக்காமல் தவிா்த்து வந்த நிலையில், தன்னாா்வலா்கள் 10-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து ‘பியூசன் கிளப்’ என்ற தனியாா் அமைப்பை உருவாக்கி உணவளித்து வருகின்றனா். இவா்களின் சேவைகளை அறிந்த பென்னாகரம் பகுதியில் உள்ளோா் உணவளிக்கும் இந்த முயற்சிக்கு உதவி வருகின்றனா்.
இதுகுறித்து பியூசன் கிளப் தலைவா் மா.பழனி கூறுகையில், பென்னாகரம் பகுதியில் உள்ள ஆதரவற்றோா், முதியோா்களுக்கு தொற்று காலம் முதல் உணவளித்து வருகிறோம். அவா்களுக்கு உதவ ஏராளமான தன்னாா்வலா்கள் முன்வருகின்றனா். இப்பணியை உறுப்பினா்கள் மணிவண்ணண், பெரியசாமி, தேவகி, வணிகா் சங்கத் தலைவா் காா்த்திக் உள்ளிட்டோா் இணைந்து செயல்படுத்தி வருகிறோம் என்றாா்.