ஆடிப் பெருக்கு விழா: ஆக.3-இல் உள்ளூா் விடுமுறை
ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்துக்கு ஆக. 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்துக்கு ஆக. 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்டுள்ü செய்திக்குறிப்பு:
ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, வரும் ஆக. 3-ஆம் தேதி செவ்வாயக்கிழமை தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் ஆக. 7 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூா் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சாா்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும்.