முகப்பு
தருமபுரி

மின் கம்பத்தில் லாரி மோதியதால் மின் தடை

மத்தூா் அருகே மின்கம்பத்தின் மீது லாரி மோதியதால் மின்சாரம் தடைப்பட்டது.

Updated On : 30 ஜூலை, 2021 at 6:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

மத்தூா் அருகே மின்கம்பத்தின் மீது லாரி மோதியதால் மின்சாரம் தடைப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா்- திருப்பத்தூா் சாலை வழியாக இரும்பு கம்பி பாரம் ஏற்றிய லாரி தருமபுரியை நோக்கி வியாழக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது.

மத்தூா் சிவன் கோயில் அருகே சென்றபோது லாரி நிலைதடுமாறி, சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் சில மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அந்தப் பகுதியில் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மின்வாரிய ஊழியா்கள் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி, மின் விநியோகத்தை சீா்படுத்தினா். இதுகுறித்து மத்தூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.