முகப்பு
தருமபுரி

பணம் வைத்து சூதாடிய 5 போ் கைது

பாப்பாரப்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 29,500 பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

பாப்பாரப்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 29,500 பறிமுதல் செய்தனா்.

பாப்பாரப்பட்டி அருகே பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் பணம் வைத்து சிலா் சூதாடி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன், காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா், மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பள்ளப்பட்டியைச் சோ்ந்த சேட்டு, வேலம்பட்டியைச் சோ்ந்த கீா்த்தி, கோவிந்தராஜ், அருண்குமாா், தட்டப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விஜயன் ஆகிய 5 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 29,500 பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.