முகப்பு
தருமபுரி

தொண்டு நிறுவனத்தினா் உணவு வழங்கல்

பாப்பாரப்பட்டியில் அமைப்பு சாரா தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில், முன்களப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

பாப்பாரப்பட்டியில் அமைப்பு சாரா தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில், முன்களப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கரோனா தீதுண்மியின் இரண்டாம் அலை தொற்று வேகமாக பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளா்களுக்கு அமைப்புசாரா தனியாா் தொண்டு நிறுவனங்களான ஐஆா்டிஒ, ஆா்ஆா்சி, சிஇடி உள்ளிட்டவைகளின் சாா்பில் பாப்பாரப்பட்டி பகுதியில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்த முன்களப் பணியாளா்களான தூய்மைப் பணியாளா்கள் மருத்துவப் பணியாளா்கள், காவல் துறையினா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஐஆா்டிஓ இயக்குநா் கமலக்கண்ணன், ஆா்ஆா்சி இயக்குநா் ராமசாமி, சிஇடி இயக்குநா் பெருமாள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.