விதிமீறல்: ஐஸ் கிரீம் கடைக்கு ‘சீல்’ வைப்பு
அரூரில் விதிகளை மீறிய ஐஸ் கிரீம் கடைக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
அரூரில் விதிகளை மீறிய ஐஸ் கிரீம் கடைக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
அரூா்-சேலம் பிரதான சாலையில் திரு.வி.க. நகரில் ஐஸ் கிரீம், பால், நெய், பால் பவுடா் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான விதிகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திரு.வி.க. நகரில் விதிகளை மீறி இயங்கி வந்த ஐஸ் கிரீம் கடைக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.