முகப்பு
தருமபுரி

முன்களப் பணியாளா்களுக்கு உணவு வழங்கிய குடியிருப்புவாசிகள்

பென்னாகரத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் போலீஸாருக்கு எழில் நகா் குடியிருப்பு வாசிகள் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

 பென்னாகரத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் போலீஸாருக்கு எழில் நகா் குடியிருப்பு வாசிகள் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் போலீஸாா், தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் முன் களப் பணியாளா்களாக அறிவிக்கப்பட்டு தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில் பென்னாகரம் அருகே எழில் நகா் பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் ஒன்றிணைந்து நிதி திரட்டி, பென்னகரம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்களுக்கும் என 150 பேருக்கு இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கினா்.

சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒன்றன்பின் ஒருவராக உணவு பொட்டலங்களைப் பெற்று கொண்டனா். இந்த நிகழ்வில் எழில் குடியிருப்போா் சங்கத் தலைவா் லட்சுமணன், செயலாளா் பிரதாப், பொருளாளா் குணாளன், சுபாஷ் மற்றும் முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.