முகப்பு
தருமபுரி

முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

பென்னாகரம் பகுதிகளில் முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பென்னாகரம் பகுதிகளில் முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாமக மாநிலத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான கோ.க.மணி தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்கள் 36 பேருக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருள்களும், மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள் 124 பேருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கினாா். இதே போல, பாப்பாரப்பட்டி பேருராட்சியில் பணிபுரியும் 28 தூய்மைப் பணியாள்களுக்கும், மாதே அள்ளி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 18 பேருக்கும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இந்த நிகழ்வுகளில், பென்னாகரம் தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் கனிமொழி, குழந்தைகள் நல மருத்துவா் அருண் பிரசாத், மருத்துவா்கள் பாலாஜி, கணேசன், பாமக மாவட்டத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.