முகப்பு
தருமபுரி

மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

பென்னாகரம் அருகே இருளா் இன மலைவாழ் மக்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பென்னாகரம் அருகே இருளா் இன மலைவாழ் மக்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட எரிமலை பகுதியில் வசிக்கும் இருளா் இன மலைவாழ் மக்களுக்கு, சென்னையைச் சோ்ந்த ரெட் லீ ஈகோ சொல்யூஷன் என்ற தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், ஏரிமலை கிராமப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளா் இன மலைவாழ் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றனா். இதில், காந்திஜி சேவாலயா நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.