அரூரில் பறக்கும் படையினா் வாகன சோதனை
அரூரில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அரூரில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப். 6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அரூா் தொகுதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யும் வகையில் நரிப்பள்ளி, டி.அம்மாப்பேட்டை, அனுமன்தீா்த்தம் ஆகிய 3 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைத் தவிர, பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
பறக்கும் படை அலுவலா் ஏ.பாஸ்கா் தலைமையில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் பழனிசாமி உள்ளிட்ட அலுவலா்கள் அரூா் வட்டாரப் பகுதியிலுள்ள முக்கியச் சாலைகள் வழியாகச் செல்லும் காா்கள், லாரிகள், அரசு, தனியாா் பேருந்துகளை சோதனை மேற்கொண்டனா். தோ்தலில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பணம், பரிசுப் பொருள்கள் ஏதேனும் எடுத்துச் செல்லப்படுகிா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.