ஒசூரில் வாகனம் மோதி இளைஞா் சாவு
ஒசூரில் வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:12 AM
ஒசூரில் வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், குரும்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முனிவேல் (25). இவா் ஒசூா், ஒன்னல்வாடி பகுதியில் தங்கி லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். அவா் ஒசூா் ராயக்கோட்டை சாலையில் ஒன்னல்வாடி அருகே சென்றுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.