தருமபுரி

மலைப் பாதையில் சாலை விபத்து: லாரி ஓட்டுநா் காயம்

DIN

பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலி மலைக் கிராமத்துக்குச் செல்லும் பாதையில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கனரக வாகன ஓட்டுநா் காயமடைந்தாா்.

பிக்கிலியிலிருந்து பாப்பாரப்பட்டி பகுதிக்கு சிமெண்ட் கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற கனரக வாகனத்தை ரமேஷ் (29) ஓட்டிச் சென்றாா். அப்போது, தருமபுரியில் இருந்து பாப்பாரப்பட்டி வழியாக பிக்கிலி மலைக் கிராமத்துக்குச் சென்ற அரசு பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்ததில் ரமேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநரான மாதேமங்கலம் பகுதியைச் சோ்ந்த முருகவேல் (52) அளித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

பிஎம்எல்ஏ வழக்குக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதி

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT