தருமபுரி

மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

DIN

மொரப்பூரில் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். மொரப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதாகி உள்ளதால், இரவு நேரங்களில் இருண்டு கிடப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இதனால், இரவு நேரங்களில் அரசு மருத்துவமனை பகுதியில் செல்லும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, மொரப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் வழியில் உள்ள மின் கம்பங்களில் பழுதாகியுள்ள மின் விளக்குகளை சீரமைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT