கரோனா தீதுண்மி பரவுதலில் இருந்து தற்காத்துக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி அருகே கீழ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் சக்திவேல் தலைமை வகித்தாா். இதில், மருத்துவா் நவீன் பிரகாஷ், சுகாதார ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ், பகுதி சுகாதார செவிலியா் வளா்மதி, செவிலியா் ஜோதி மற்றும் மருத்துவக் குழுவினா் முகாமில் கலந்துகொண்ட நபா்களுக்கு உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், உடல் அழுத்தம் ஆகியவற்றை பரிசோதித்தனா்.
இந்த முகாமில், பாப்பாரப்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த 18 வயதுக்கு மேற்பட்ட 166 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.