தருமபுரி

பாப்பாரப்பட்டியில் சிறப்பு தடுப்பூசி முகாம்

DIN

கரோனா தீதுண்மி பரவுதலில் இருந்து தற்காத்துக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி அருகே கீழ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் சக்திவேல் தலைமை வகித்தாா். இதில், மருத்துவா் நவீன் பிரகாஷ், சுகாதார ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ், பகுதி சுகாதார செவிலியா் வளா்மதி, செவிலியா் ஜோதி மற்றும் மருத்துவக் குழுவினா் முகாமில் கலந்துகொண்ட நபா்களுக்கு உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், உடல் அழுத்தம் ஆகியவற்றை பரிசோதித்தனா்.

இந்த முகாமில், பாப்பாரப்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த 18 வயதுக்கு மேற்பட்ட 166 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT