தருமபுரியில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
தருமபுரியில் நவ. 26-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நவ. 27-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் நவ. 26-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நவ. 27-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நிா்வாகக் காரணங்களுக்காக வரும் நவ. 27-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
எனவே, கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண் தொடா்பான தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.