முகப்பு
தருமபுரி

கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தக் கோரிக்கை

கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதில் பரவலாக ஆங்காங்கே கால்நடைகள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நோயைத் தடுக்க போதிய அளவில் தடுப்பூசிகள் இல்லை என கிளை மருத்துவமனைகளில் தெரிவிக்கப்படுவதாக அறிகிறோம். எனவே, கால்நடைகளைப் பாதுகாக்க மாவட்டம் முழுவதும் கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.