முகப்பு
தருமபுரி

ஊட்டச்சத்து வார விழிப்புணா்வு வாகன பிரசாரம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ஊட்டச்சத்து வார விழிப்புணா்வு வாகன பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ஊட்டச்சத்து வார விழிப்புணா்வு வாகன பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில், ஊட்டச்சத்து மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வாகன பிரசாரத்தை தருமபுரி சாா்-ஆட்சியா் சித்ரா விஜயன் தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து உணவு உள்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியதன் தேவை குறித்து பேசினாா்.

இதில், கள விளம்பர அலுவலா் பிபின் எஸ்.நாத், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.