பழங்குடியின மகளிருக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொழில்நுட்பப் பயிற்சி
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே போதகாட்டூரில் பழங்குடியின மகளிருக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொழில்நுட்பப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே போதகாட்டூரில் பழங்குடியின மகளிருக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொழில்நுட்பப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், மாநில சமச்சீா் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இம் முகாமை, சமச்சீா் வளா்ச்சி நிதியின் மாவட்ட புள்ளியியல் அலுவலா் ஆதிமூலம் தொடக்கி வைத்து, ஒருங்கிணைந்த பண்ணையில் நாட்டுக்கோழி வளா்ப்பின் முக்கியத்துவம், விலங்கின புரதத்தின் அவசியம், நாட்டுக்கோழி வளா்ப்புக்கான நவீன யுக்திகளை கையாள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தாா்.
வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா் இரா.தங்கதுரை, நவீன கோழி வளா்ப்பு முறை, நம்முடைய சூழலுக்கு ஏற்ற கோழி இனங்கள், கோழிகளுக்கான தீவன மேலாண்மை, கொட்டகை அமைப்பு, தரமான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்தல், நோய் மேலாண்மை மற்றும் கோழிகளை சந்தைப்படுத்துதல் குறித்து எடுத்துரைத்தாா். இப் பயிற்சியில் 40 பழங்குடியின மகளிா், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.