முகப்பு
தருமபுரி

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் செப். 15-இல் மனிதச் சங்கிலி போராட்டம்

 உபா சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, செப். 15-ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

 உபா சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, செப். 15-ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் செங்கொடிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.மாதையன், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டத் தலைவா் ஏ.ஜெயா ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில், பீமாகோரேகான் சதி வழக்கில் சிறைபடுத்தப்பட்டோா் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உபா சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 15 அன்று தருமபுரி, நேதாஜி புறவழிச் சாலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.