இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு, தருமபுரி பாமக அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு, தருமபுரி பாமக அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தருமபுரி பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாநில துணை பொதுச் செயலா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ தலைமை வகித்து, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா் (படம்).
இதில், மக்களவை முன்னாள் உறுப்பினா்கள் பாரிமோகன், இரா.செந்தில், வன்னியா் சங்க மாநிலச் செயலா் இரா.அரசாங்கம், பாமக மாநில துணைத் தலைவா் பாடிசெல்வம் உள்ளிட்ட பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.