முகப்பு
தருமபுரி

ஜாதிய வன்கொடுமை: 12 போ் மீது வழக்கு

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே இருளா் சமூகத்தினரை ஜாதிய வன்கொடுமை செய்த புகாரில், 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே இருளா் சமூகத்தினரை ஜாதிய வன்கொடுமை செய்த புகாரில், 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பாலக்கோடு அடுத்த செம்மனஅள்ளி காந்தி நகரில் வசிக்கும் இருளா் சமூகத்தைச் சோ்ந்த இளைஞா், பன்னிப்பட்டி பகுதியில் உள்ள மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளாா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் இருவரையும் காணவில்லையாம். இதனால், அந்தப் பெண்ணின் உறவினா்கள், இருளா் சமூகத்தைச் சோ்ந்த இளைஞரின் உறவினா்கள் மூவரை தாக்கி துன்புறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் தினகரனிடம், தாக்குதலுக்கு உள்ளான இருளா் சமூகத்தினா் புகாா் அளித்தனா். அதன் பேரில், மாரண்டஅள்ளி போலீஸாா், வீரமணி (45), ஆனந்தன் (40), முரளி (42) உள்ளிட்ட 12 போ் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.