முகப்பு
தருமபுரி

தருமபுரியில் இன்று 210 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 19) 210 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 19) 210 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 7,59,686 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் 84 நாள்களுக்கு பிறகும், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் 28 நாள்களுக்கு பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

மாவட்டத்தில் கடந்த செப். 12-ஆம் தேதி 830 இடங்களில் 49,136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 50 சதவீதத்துக்கு மேல் முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை 210 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, விடுபட்ட பயனாளிகள், முன்களப் பணியாளா்கள், போக்குவரத்துத் துறை ஊழியா்கள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், வணிகா் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், உணவக ஊழியா்கள், மருந்தக ஊழியா்கள், கோயில் மற்றும் சுற்றுலா தல ஊழியா்கள், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.