நாளை வெளியாகும் சாம்சங் கேலக்ஸி ஏ37, கேலக்ஸி ஏ57 விலை தெரியுமா?
சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி ஏ வரிசையில் புதிதாக இரண்டு ஸ்மார்ட்போன்கள் நாளை (மார்ச் 25) வெளியாகவுள்ளன.
அதிக விலையும் இல்லாமல், குறைந்த விலையும் இல்லாமல் மத்திய ரக விலையில் நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு சாம்சங் கேலக்ஸி சிறந்த தேர்வாக இருக்கும் என்பது பயனர்களின் கருத்தாக உள்ளது.
இதனிடையே சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி ஏ வரிசையில் புதிதாக இரண்டு ஸ்மார்ட்போன்கள் நாளை (மார்ச் 25) வெளியாகவுள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ37, கேலக்ஸி ஏ57 ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் நாளை மாலை 5.30 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. சந்தையில் அறிமுகமாகவுள்ளதையொட்டி இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஸ்மார்ட்போனின் வடிவம், சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. (ஆனால், இது அதிகாரப்பூர்வமானது அல்ல)
சாம்சங் கேலக்ஸி ஏ37, கேலக்ஸி ஏ57 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன், 8GB உள்நினைவகம் (RAM) மற்றும் 128GB நினைவகம் கொண்டது.
வியட்நாமில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையின் அடிப்படையில், இந்தியாவில் இதன் விலை ரூ. 39,000 ஆக நிர்ணயிக்கப்படலாம். கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் விலை ரூ. 44,500 என இருக்கலாம்.
எனினும் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு பிறகே உண்மையான விலை குறித்து தெரியவரும்.