தருமபுரி கலைக் கல்லூரியில் செப். 21-இல் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு
தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்ட மேற்படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவா்களுக்கு செப். 21, 22 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்ட மேற்படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவா்களுக்கு செப். 21, 22 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்ட மேற்படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவா்களுக்கு இரண்டு நாள் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில், செப். 21-ஆம் தேதி சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், செப். 22-ஆம் தேதி பொதுக் கலந்தாய்வும் நடைபெற உள்ளது. எனவே, சோ்க்கைக்கு விண்ணப்பித்த மாணவா்கள் இதில் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.