தருமபுரி

அரசுப் பள்ளிக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு

DIN

அரூரை அடுத்த பேதாதம்பட்டியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சாா்பில் உணவுப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

அரூா் ஊராட்சி ஒன்றியம், பேதாதம்பட்டி அரசு தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படிக்கின்றனா். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உணவுப் பொருள்கள், அத்தியாவாசியப் பொருள்களை ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையினா் வழங்கினா்.

அறக்கட்டளை சாா்பில் வழங்கப்பட்டு பொருள்களை பள்ளி மாணவா்களிடம் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வழங்கினாா். இந்த விழாவில் அரூா் மாவட்டக் கல்வி அலுவலா் பொன்முடி, ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை அறங்காவலா் சத்யா, ஊராட்சி மன்றத் தலைவா் செ.பாரதிராஜா, பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT